கார் மோதி வாலிபர் பலி

வீரவநல்லூர், ஆக.11:  மேலச்செவல் வேளார் தெருவைச் சேர்ந்தவர் அருணாசலம் மகன் ராம்குமார்(21). நெல்லையில் உள்ள ஜவுளி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் பைக்கில் ராம்குமார் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். கோபாலசமுத்திரத்தை அடுத்த முகாம் அருகே செல்லும்போது எதிரே வந்த சொகுசு கார், பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ராம்குமார் உயிரிழந்தார். தகவலறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பாளையை சேர்ந்த அயூப்கான்(52) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: