புதுச்சேரி, ஆக. 11: புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி, வாட்ஸ்அப்பில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:காவல் தலைமை அலுவலகத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட இருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இதுபோன்ற தலைமை பதவிகளிடம் இதுவே எதிர்பார்க்கப்படுகிறது. இதுதான் உண்மையான வழியும்கூட. இந்த வழி புதுச்சேரியை பாதுகாக்கும். புதுச்சேரியை செழிப்பானதாக மாற்றும். காவல்துறை சேவை செய்வதற்கான வழி. சட்ட விதிகளை உறுதி செய்வதற்கான வழி. நீதியை உறுதி செய்வதற்கான வழி. தரவரிசையில் நலன்கள் மற்றும் கோப்புகள் உறுதி செய்யப்படும். ஒருவரின் நிலை மற்றும் சலுகைகளுக்கு நீதி வழங்குவதற்கான வழி. உண்மையான ஆர்வத்துடன் சேவை செய்வதற்கான வழி. இது அனைத்து துறைகளுக்கும் ஒரு எடுத்துக்காட்டு. புதுச்சேரியில் குற்றங்களை தடுக்கும் எந்த ஒரு விஷயத்தையும் டிஜிபியிடம் மக்கள் தெரிவிக்க வேண்டும்.