கள்ளக்குறிச்சி, ஆக. 11: கள்ளக்குறிச்சி நகராட்சி 2 வது வார்டு வஉசிநகர்
6 வது மற்றும் 7 வது குறுக்கு தெரு பகுதியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்கள் குடிநீர் பயன்படுத்துவதற்கு அதே பகுதியில் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் ஆழ்குழாய் கிணறுடன் மினி டேங்க் ஒன்று மட்டும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மினி டேங்கில் இருந்து அப்பகுதி மக்கள் தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர்.தொடர் வறட்சியால் ஆழ்குழாய்கிணற்றில் நீர் ஊற்று முற்றிலும் குறைந்தது.இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.மேலும் தெரு பைப்லைன் மூலம் நகராட்சி நிர்வாகம் கூட்டுகுடிநீர் வழங்கப்பட்டு வந்ததும் தற்போது சரிவரவழங்கபடவில்லை இதனால் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்தது.