திருமயம் அருகே லாரி, பள்ளி வேன் மோதல்

திருமயம், ஆக.11: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள சிவபுரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு சொந்தமான வாகனம் நேற்று காலை சுமார் 10க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றிக்கொண்டு திருமயம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது வேன் கடியாபட்டி அடுத்த செல்வமணி பாலம் அருகே வந்தபோது, திருமயத்தில் இருந்து ராயவரம் நோக்கி சென்ற டிப்பர் லாரியும் வேணும் நேருக்குநேர் மோதிக் கொண்டது. இதில் 2 பள்ளி குழந்தைகள் உட்பட 3 பேர் காயம் அடைந்தனர். அவர்களை புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இதுகுறித்து திருமயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: