பொன்னமராவதி அருகே அடகு கடைக்காரரை மிரட்டி 6 பவுன் கை செயின் பறிப்பு

பொன்னமராவதி, ஆக.11: பொன்னமராவதி அருகே நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த அடகு கடைக்காரரை கத்தியைகாட்டி மிரட்டி 6பவுன் கை செயிணை பறித்துச் சென்ற மர்ம பைக் திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.பொன்னமராவதி அருகே உள்ள சொக்கநாதபட்டியைச் சேர்ந்தவர் சிவலிங்கம் (73). ஆலவயலில் வசித்து வரும் இவர் வீட்டின் முன் நகை அடகு கடை வைத்துள்ளார். நேற்று காலை சிவலிங்கம் பொன்னமராவதிதிருச்சி சாலையில் ஆலவயலில் இருந்து அம்மன்குறிச்சி நோக்கி நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். பொரசம் கண்மாய் என்ற இடத்தில் இவரை வழிமறித்த ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி கையில் கிடந்த செயனை பறித்துள்ளார். அவர் திருடனிடம் போராடியுள்ளார். ஆனால் முடியவில்லை. அந்த மர்ம நபர் கைசெயினை பறித்துக்கொண்டு அருகில் தயாராக இருந்த தயாராக இருந்த ஒருவருடன் பைக்கில் தப்பினார்.

இதுகுறித்த புகாரின்பேரில் பொன்னமராவதி போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதேபோல கடந்த 4 நாட்களுக்கு முன் இதே பகுதியில் நகரப்பட்டி வடக்கிப்பட்டியில் கத்தியை காட்டி ஒரு மூதாட்டியினை செயினை பறித்துச்சென்றது குறிப்பிடத்தக்கது. ஆலவயல் கருமங்காடு விளக்கு, நகரப்பட்டி அருகில் குளத்துப்பட்டி விளக்கு ஆகிய இடங்களில் அடிக்கடி வழிப்பறி நடைபெற்று வருகிறது. இதனால் இப்பகுதியில் செல்வோர் பெரும் அச்சத்துடன் சென்று வருவதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: