அறந்தாங்கி, ஆக.11:
அறந்தாங்கி அடுத்த பெருங்காட்டில் நடந்த முதல்வரின் சிறப்பு குறைதீர் திட்ட முகாமில் 19 மனுக்கள் பெறப்பட்டது.அறந்தாங்கியை அடுத்த பெருங்காட்டில் தமிழக முதல்வரின் சிறப்பு குறைதீர் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமுக்கு நாகுடி சரக வருவாய் ஆய்வாளர் செந்தமிழ்செல்வி தலைமை வகித்து, மனுக்களை பெற்றுக் கொண்டார். கிராம நிர்வாக அலுவலர் ரத்தினகுமார் முன்னிலை வகித்தார். முகாமில் குடிநீர், பள்ளிக்கு பாதை வசதி, பட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை உள்ளடக்கிய 19 மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.