மீனவர்கள் கோரிக்கை நாகை மாவட்டத்தில் புதுவை மாநில சாராயம் கடத்திய 3 பெண்கள் உள்பட 57 பேர் கைது

நாகை,ஆக.11: நாகை மாவட்டத்தில் 3 நாட்கள் போலீசார் நடத்திய மதுவிலக்கு சோதனையில் 3 பெண்கள் உட்பட 57 பேரை கைது செய்தனர்.நாகை மாவட்டத்தில் மது கடத்தலை தடுக்க எஸ்பி ராஜசேகரன் உத்தரவிட்டார். இதன்பேரில் மதுவிலக்கு போலீசார் கடந்த 6 முதல் 8ம் தேதி வரை 3 நாட்களுக்கு மதுவிலக்கு சோதனை நடத்தினர். இதில் 80 மதுவிலக்குகள் பதிவு செய்யப்பட்டது. நாகை வெளிப்பாளையம் பாரதி மார்க்கெட் மேல்புறத்தை சேர்ந்த பாண்டியம்மாள்(36), ராதாமங்களம் பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி(35), பனைமேடு காலனித் தெருவை சேர்ந்த கண்ணகி(50) என்ற 3 பெண்கள் உட்பட 57 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 7440 லிட்டர் பாண்டிச்சேரி மாநில சாராயம், 3 லிட்டர் பாண்டிச்சேரி மாநில மதுபானம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மது கடத்தலுக்கு பயன்படுத்திய 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: