நாகை, ஆக.11: திருத்துறைப்பூண்டி கடியாச்சேரி பகுதிையச் சேர்ந்தவர் செந்தில்(36). இவர் திருத்துறைப்பூண்டி டெப்போ அரசு பஸ்சில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 9ம் தேதி நாகை புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் அரசு பஸ்சில் பணியில் இருந்தார். நாகை மேலகோட்டைவாசல் அருகே பஸ் சென்றபோது பயணிகளிடம் டிக்கெட் கேட்டு வாங்கும்படி கூறினார். அப்போது அந்தனப்பேட்டையை சேர்ந்த பிரபாகரன் ஏற்கனவே டிக்கெட் வாங்கிவிட்டதாக கூறினார். உடனே நடத்துனர் செந்தில் டிக்கெட்டை காண்பிக்கும்படி கூறினார். ஆனால் அவர் டிக்கெட்டை காட்ட மறுத்து நடத்துனர் செந்திலை கையால் அடித்தார். இதுகுறித்து செந்தில் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் பிரபாகரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடததி வருகின்றனர்.