வேதாரண்யம் காளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

வேதாரண்யம், ஆக.11: வேதாரண்யம் சன்னதி தெருவில் அமைந்துள்ள வேதமாகாளியம்மன் கோயிலில் ஆடி வௌ்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பல்வேறு விதமான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்பு அம்மன் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஏராளமான பெண்கள் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜைகள் நடத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டை கோயில் நிர்வாகிகள் செய்தனர்.

Related Stories: