சிந்தலவாடியில் குழாயில் உடைப்பு குடிநீர் வீணாகும் அவலம்

கரூர். ஆக. 11: கரூர் மாவட்டம் சிந்தலவாடி நரசிம்மர் கோயில் சாலை வழியாக கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. கடந்த 10 நாட்களாக தண்ணீர் வீணாகிறது. அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கிராமங்களுக்குச் செல்ல வேண்டிய தண்ணீரும் தடைபட்டு போகிறது. எனவே உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: