கரூரில் பரிதாபம் கடன் தொல்லையால் பெண் தற்கொலை

கரூர், ஆக. 11: வாங்கிய கடனை அடைக்க முடியாமல் அவதிப்பட்டு வந்த பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கரூர் வையாபுரி நகரைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரின் மனைவி சுசீலா(47). இவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் சுசீலா தனது மகள் திருமணத்துக்காக இந்த பகுதியில் உள்ள மகளிர் குழுவில் பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் அவர் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் விரக்தியடைந்த அவர் நேற்று முன்தினம மதியம் வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: