கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு

திருவில்லிபுத்தூர், ஆக. 8: திருவில்லிபுத்தூர் அருகே உள்ள குன்னூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா 30க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கியும், சமுதாய வளைகாப்பு விழாவும் நடத்தி வைத்துப் பேசினார்.மருத்துவமனை தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே உள்ள குன்னூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வார விழா, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா மற்றும் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. விழாவுக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெயராமன் முன்னிலை வகித்து திட்ட உரை ஆற்றினார்.விழாவில் கலந்து கொண்ட திருவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ சந்திரபிரபா முத்தையா குத்துவிளக்கு ஏற்றி வைத்து, 30க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கியும், சமுதாய வளைகாப்பு விழாவும் நடத்தி வைத்துப் பேசினார். பின்னர் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோருக்கு சான்றிதழ்களை வழங்கினார். விழாவில் திருவில்லிபுத்தூர் எல்டி வங்கி தலைவர் முத்தையா, டாக்டர்கள் சிவராமன், முத்தரசி, செல்வி, செல்வராஜ், சுந்தரபாண்டியம், கலசலிங்கம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தர்மலிங்கம், சுகாதார ஆய்வாளர்கள் பாலமுருகன், ஜெயக்குமார், செவிலியர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: