புதுச்சேரி, ஆக. 8: புதுச்சேரி உள்ளாட்சித்துறை இயக்குநர் மலர்க்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடைபெறும் பிறப்பு/ இறப்பு நிகழ்வுகள் மத்திய பிறப்பு மற்றும் இறப்பு சட்டம் 1969ன் பிரிவு 8 உடன் புதுச்சேரி பிறப்பு மற்றும் இறப்பு விதிகள் 1999ன் பிரிவு 8(1)(ஏ-இ)ன் 30 நாட்களுக்குள் அந்தந்த பகுதியில் உள்ள நகராட்சி/ கொம்யூன் பஞ்சாயத்து பதிவாளர் மூலமாக பதிவு செய்யப்பட வேண்டும். தவறும்பட்சத்தில் 30 நாட்களுக்கு மேல் ஒரு வருடத்திற்குள்ளாக தாமதமாக விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் தலைமை பதிவாளரின் (பிறப்பு/இறப்பு) பரிசீலனைக்கு பிறகு புதுச்சேரி பிறப்பு மற்றும் இறப்பு விதிகள் 1999ன் பிரிவு 9(2)ன் கீழ் உரிய ஒப்புதல் பெறப்பட்டு பதிவு செய்யப்படும். ஒரு வருடத்திற்கு மேல் தாமதமாக விண்ணப்பிப்பவர்கள், பிறப்பு மற்றும் இறப்பு சட்டம் 1969 (மத்திய சட்டம் 18/1969) பிரிவு 13(2) உடன் புதுச்சேரி பிறப்பு மற்றும் இறப்பு விதிகள் 1999ன் பிரிவு 9(3)ன் கீழ் நீதிமன்ற ஆணை பெற்று பதிவு செய்திட வேண்டும்.