டாஸ்மாக் பாரில் அடிதடி மேலும் ஒருவர் கைது

ஈரோடு, ஜூலை 24:  திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் ராஜூ மகன் சக்தி (26). சேலம் மாவட்டம், எடப்பாடி கெண்டைவலவு பகுதியை சேர்ந்தவர் பெரியண்ணன் மகன் ரங்கன் (27). இவர்கள் இருவரும், ஈரோடு பவர்ஹவுஸ் ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையின் பாரில் மதுகுடிக்க சென்றனர். அப்போது, அங்கு வந்த 4 வாலிபர்கள், சக்தி மற்றும் ரங்கனிடம் தகராறில் ஈடுபட்டதுடன், அவர்களை கட்டையால் தாக்கினர். இதில், படுகாயம் அடைந்த இருவரும் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின்பேரில், ஈரோடு வளையக்கார வீதியை சேர்ந்த பாலாஜி (26), காமாட்சி காட்டை சேர்ந்த  சபரிநாதன் (25), விவிசிஆர் நகரை சேர்ந்த பிரகாஷ் (30) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.  இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஈரோடு சூளை ஈ.பி.பி.நகரை சேர்ந்த அருண்ராஜ் (30) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Related Stories: