கொடுமுடி, ஜூலை 24: கொடுமுடியில் தராசு மற்றும் எடை அளவுகள் முத்திரையிடும் முகாம் நடந்து வருகிறது. கொடுமுடி வட்டார அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் தராசு மற்றும் எடை அளவுகள் முத்திரையிடும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு முகாம், நேற்று கொடுமுடி வட்டார அனைத்து வணிகர்கள் நலச்சங்க அலுவலகத்தில் துவங்கியது. வரும் 28ம் தேதி வரை நடக்கும் இந்த முகாமில் தராசு மற்றும் எடை அளவுகள் பயன்படுத்தும் அனைத்து வணிகர்களும் கலந்து கொண்டு முத்திரை சான்று பெற்றுக்கொள்ளலாம் என வணிகர்கள் நலச்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.