கொடிவேரி அணையில் மூழ்கி வாலிபர் பலி

ஈரோடு, ஜூலை 24: கொடிவேரி அணையில் மூழ்கி வாலிபர் பலியானார். சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் ஹரிபிரசாத் (26). இவர், தனியார் முதியோர் இல்லத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது நண்பர்கள் 6 பேருடன் ஈரோடு மாவட்டம் கொடிவேரி அணைக்கு சுற்றுலா வந்தார்.பின்னர், அவர்கள் அணையில் இறங்கி குளித்தனர். அப்போது ஹரிபிரசாத் ஆழமான பகுதிக்கு சென்றார். அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். இதைப்பார்த்து அவரது நண்பர்கள் ஹரிபிரசாத்தை காப்பாற்ற முயன்றனர். ஆனால், அதற்குள் ஹரிபிரசாத் நீரில் மூழ்கினார். தகவலறிந்த பங்களாபுதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹரி பிரசாத்தின் உடலை நீண்ட நேரம் போராடி இறந்த நிலையில் மீட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: