தலை ஆடிக்கு வந்த புதுப்பெண் தற்கொலை

திருமங்கலம், ஜூலை 24: திருமங்கலத்தை அடுத்துள்ள ஏ.மேட்டுபட்டியை சேர்ந்தவர் ராமர்(50). இவரது மகள் சியமளா(26). இவருக்கும் வரகுணியை சேர்ந்த அழகுராஜா(30) என்பவருக்கும் கடந்த மாதம் 14ம் தேதி திருமணம் நடந்துள்ளது. அழகுராஜா சென்னையில் அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். கணவருடன் சென்னையில் இருந்த சியாமளா கடந்த வாரம் தலை ஆடிக்கு கணருடன் பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார்.

கடந்த 19ம் தேதி கணவர் அழகுராஜா சென்னைக்கு சென்றுவிட்டார். பெற்றோர் வீட்டில் இருந்த சியமளா அதன்பின் சற்று மனநலம் பாதித்த மாதிரி காணப்பட்டுள்ளார்.இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது துாக்குமாட்டி தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சியமளா உயிரிழந்தார். இது குறித்து சிந்துபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: