அலங்காநல்லூர் அருகே கிணற்றில் விழுந்த புள்ளிமான் சாவு

அலங்காநல்லூர், ஜூலை 24: அலங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் மீட்கும் போது பரிதாபமாக உயிரிழந்தது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே வகுத்து மலைப்பகுதியிலிருந்து தண்ணீர் தேடி புள்ளிமான் ஒன்று வந்தது. இது கீழச்சின்னனம்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான 100 அடி ஆழமுள்ள ஒரு கிணற்றில் புதர் மண்டிக்கிடந்தது தெரியாமல் அந்த வழியாக வந்தபோது அதில் தவறி விழுந்துவிட்டது.

தகவலறிந்த அலங்காநல்லூர் தீயணைப்பு படையினர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கிணற்றில் கிடந்த மானை மீட்ட போது அது பரிதாபமாக இறந்து போனது. பின்னர் மானை பாலமேடு கால்நடை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனைக்கு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது. இறந்துபோன புள்ளிமானுக்கு வயது சுமார் 2 இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: