அலங்காநல்லூர், ஜூலை 24: அலங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் மீட்கும் போது பரிதாபமாக உயிரிழந்தது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே வகுத்து மலைப்பகுதியிலிருந்து தண்ணீர் தேடி புள்ளிமான் ஒன்று வந்தது. இது கீழச்சின்னனம்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான 100 அடி ஆழமுள்ள ஒரு கிணற்றில் புதர் மண்டிக்கிடந்தது தெரியாமல் அந்த வழியாக வந்தபோது அதில் தவறி விழுந்துவிட்டது.