சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல் வசூல் ரூ.12 லட்சம்

திருப்பரங்குன்றம், ஜூலை 24: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை மாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம். இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி நேற்று நடந்தது. இதில் ஜூன் 27ம் தேதி முதல் ஜூலை 22ம் தேதி வரை பக்தர்கள் வழங்கிய உண்டியல் காணிக்கைகள் கோயில் துணை ஆணையர் (பொறுப்பு) மாரிமுத்து, கண்காணிப்பாளர் கோகுலகண்ணன், அலுவலர்கள் மணிமாறன், நெடுஞ்செழியன், புகழேந்தி ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணிக்கை நடைபெற்றது.இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் ஊழியர்களும், மாணவர்களும் ஈடுபட்டனர். உண்டியலில் காணிக்கையாக 106 கிராம் தங்கம், 985 கிராம் வெள்ளி மற்றும் ரொக்கமாக ரூ.12 லட்சம் 55 ஆயிரத்து 941 இருந்ததாக கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: