திண்டுக்கல், ஜூலை 24: பிளஸ் 1, பிளஸ் 2 ஜூன் பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி, விண்ணப்பித்தவர்களின் விடைத்தாள் நகல் இன்று வெளியிடப்பட உள்ளது.அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜூனில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வெழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்களுக்கு, இன்று காலை 10 மணிக்கு scan.tndge.in என்ற இணையதளத்தில் விடைத்தாள் நகல் வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களின் பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மறு கூட்டல், மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்பவர்கள் இதே இணையதளத்தில் அதற்கான விண்ணப்பித்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தின் இரண்டு நகல்கள் மற்றும் அதற்கான கட்டணத்துடன் வரும் 25 மற்றும் 26 ஆகிய 2 நாட்களுக்குள் உரிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் அளிக்க வேண்டும். மறு மதிப்பீட்டிற்கு ஒரு தாள் கொண்ட ஒவ்வொரு பாடத்திற்கு ரூ.505, மறு கூட்டல் செய்ய ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.205, உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரூ.305 கட்டணமாக செலுத்த வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.