பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் விழிப்புணர்வு

பழநி, ஜூலை 24: பழநி அருகே பூலாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் சைல்டுலைன் 1098 சார்பில் குழந்தை திருமணம் தடுப்பு மற்றும் பாலியல் விழிப்புணர்வு முகாம் நடந்தது. பள்ளியின் தலைமையாசிரியர் ராஜஸ்ரீ முகாமை துவக்கி வைத்தார். சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் பெரியதுரை குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள், பின் விளைவுகள், அரசின் தண்டனைகள், குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளில் இருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து எடுத்துரைத்தார். ஏற்பாடுகளை சைல்டுலைன் பணியாளர்கள் ரேணுகாதேவி, ஜோதிலட்சுமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Related Stories: