வெறிநாய் கடித்து 5 ஆடுகள் சாவு

நாமக்கல், ஜூலை 24:  நாமக்கல் அருகே வெறி நாய் கடித்து 5 ஆடுகள் உயிரிழந்தன.நாமக்கல் அருகே உள்ள செல்லப்பா காலனியை சேர்ந்தவர் பரமேஸ்வரி. இவர் 20 ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் தனது ஆடுகளை நேற்று அருகில் உள்ள விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக கட்டி இருந்தார். அப்போது அங்கு வந்த வெறி நாய்கள் ஆடுகளை கடித்து குதறின.  இதில் 5 ஆடுகள் உயிரிழந்தது. சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் வெறி நாய்களை துரத்தி மற்ற ஆடுகளை காப்பாற்றினர். இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Related Stories: