திருச்செங்கோடு கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ₹10 லட்சத்திற்கு பருத்தி, எள் விற்பனை

திருச்செங்கோடு, ஜூலை 24:

திருச்செங்கோடு கூட்டுறவு விற்பனை சங்கத்தில், ₹10 லட்சத்திற்கு பருத்தி மற்றும் எள் விற்பனையானது. திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாராந்திர எள் விற்பனை ரகசிய டெண்டர் முறையில் நடந்தது. சின்னசேலம், ஆத்தூர், கெங்கவல்லி, காங்கேயம், பரமத்தி, நாமக்கல், ராசிபுரம், வீரகனூர், தம்மம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து விவசாயிகள் எள் ரகங்களைக் கொண்டு வந்தனர். 40 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இவற்றை வாங்க பவானி, அனுமன்பள்ளி, முத்தூர், காங்கேயம், திருப்பூர், திருச்செங்கோடு, சங்ககிரி, ஈரோடு பகுதிகளைச்சேர்ந்த சுமார் 30 வியாபாரிகள் வந்தனர். ரகசிய டெண்டர் முறையில் ₹3 லட்சத்திற்கு விற்பனையானது. கருப்பு எள் ரகம் கிலோ ₹116.90 லிருந்து ₹126.90 வரை விற்பனையானது. சிவப்பு ரக எள் ₹104.90 முதல் ₹ 122.90 வரை விலை போனது.                              

பருத்தி 310  மூட்டை ₹7 லட்சத்திற்கு விலை போனது. பிடி ரகம் குவிண்டால் ₹5400 முதல் 5919 வரையிலும், சுரபி ₹5950 முதல் ₹6559 வரையிலும் விற்பனையானது

Related Stories: