தனியார் பஸ் கண்ணாடி உடைப்பு

தர்மபுரி, ஜூலை 24: தர்மபுரி அருகே தனியார் பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபரிடம் ேபாலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பொம்மனூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(41). இவர் தனியார் பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவியில் இருந்து மொரப்பூருக்கு விஜயகுமார் பஸ்சை ஓட்டி வந்தார். அப்போது, சாமண்டஅள்ளி ஏரிக்கரை அருகே வந்தபோது திடீரென வாலிபர் ஒருவர் வழிமறித்தார். பின்னர் அந்த வாலிபர் கற்களை பஸ் மீது வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதில், பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதும் நொறுங்கியது. இதுகுறித்து விஜயகுமார் மொரப்பூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், அரூர் அடுத்த இளவடை பகுதியை சேர்ந்த சக்கரபாணி(28) என்பவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: