ஆதரவின்றி தவித்த மூதாட்டி ஓசூர் காப்பகத்தில் சேர்ப்பு

ஓசூர், ஜூலை 24: போச்சம்பள்ளி இந்திரா நகரை சேர்ந்த ராஜம்மாள்(85). இவர் இருமத்தூர் மேம்பாலத்தின் அடியில் ஆதரவற்ற நிலையில் இருந்துள்ளார். இதுகுறித்து முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து, கிருஷ்ணகிரி கலெக்டர் பிரபாகருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் மூதாட்டியை மீட்கும்படி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் பூங்குழலியிடம் தெரிவித்தார். இதையடுத்து சமூக நலத்துறையை சேர்ந்த மத்தூர் முனியம்மா, காவேரிபட்டணம் லட்சுமி, விஜயலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று ராஜம்மாளை மீட்டு, ஓசூர் நரேந்திர நம்பிக்கை நட்சத்திர காப்பகத்தின் நிர்வாகி ரேவதி மோகனிடம் ஒப்படைத்தனர். இந்த காப்பகத்தில் ஆதரவற்ற முதியவர்கள் 25பேரும், 30க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளும் உள்ளனர். தமிழக அரசு காப்பகத்திற்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால், மேலும் பலரை சேர்த்து பராமரிக்க முடியும் என நிர்வாகி ரேவதி தெரிவித்தார்.

Related Stories: