கோயில் விழாவில் தகராறு வாலிபரை தாக்கிய 4 பேர் கைது

கிருஷ்ணகிரி, ஜூலை 24:குரும்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வம் மகன் சுதாகர்(28). இவர் காவேரிப்பட்டணம் கருக்கன்சாவடி பகுதியில் உள்ள பரதகோயில் விழாவில் நடந்த மகாபாரத நாடகம் பார்க்க சென்றுள்ளார். அப்போது, சுதாகருக்கும் கருக்கன்சாவடி பகுதியைச் சேர்ந்த துரை(35), நீலமேகம்(35), சத்தியராஜ்(33), மணி(25) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, சுதாகரை அவர்கள் 4 பேரும் சேர்ந்து பலமாக தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த சுதாகர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் காவேரிப்பட்டணம் போலீசார், துரை, நீலமேகம், சத்தியராஜ், மணி மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

Related Stories: