தியாகி சுப்ரமணிய சிவா நினைவு நாள் அனுசரிப்பு

தர்மபுரி, ஜூலை 24:  தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில், பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்ரமணிய சிவா மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு, தர்மபுரி மேற்கு மாவட்ட தலைவர் புகழ் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் பாப்பாரப்பட்டி பேரூர் தலைவர் தங்கராஜ், முன்னாள் கவுன்சிலர் சண்முகம், நகர தலைவர் ரமேஷ், வட்டார தலைவர் பழனி ஆகியோர் கலந்துகொண்டனர்.சுதந்திர போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவாவின், 94வது நினைவு நாளையொட்டி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், பாப்பாரப்பட்டியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  இதில் மாவட்ட செயலாளர் தேவராசன், வட்டார செயலாளர் பெருமாள், கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட நிர்வாகி நடிகர் சிங்காரவேலன், வட்டார துணை செயலாளர் குழந்தைவேல், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் புள்ளாறு, வட்டாரக்குழு உறுப்பினர்கள் பழனி, சிவன், செல்வம், கோவிந்தன், ராஜா, சாம்ராஜ், நகர நிர்வாகி பெருமாள், முருகன், மாதேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: