கார் மோதி பெண் பலி

தேன்கனிக்கோட்டை, ஜூலை 24: கெலமங்கலம் அடுத்த பச்சபனட்டி கிராமத்தை சேர்ந்தவர் சௌடப்பா மனைவி சுமக்கா(65). இவர் நேற்று முன்தினம் கெலமங்கலம் அருகே உள்ள மஞ்சலகிரி பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த கார் சுமக்கா மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கெலமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: