கெலமங்கலத்தில் புல்லட் திருட்டு

தேன்கனிக்கோட்டை, ஜூலை 24: கெலமங்கலம் அடுத்த போடிசிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(30) விவசாயி. இவர் கடந்த 10ம் தேதி இரவு வீட்டின் முன்பு அவருடைய புல்லட்டை நிறுத்தி விட்டு தூங்க சென்றுள்ளார். காலையில் வந்து பார்த்தபோது அவருடைய புல்லட் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கெலமங்கலம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வராகவன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: