அரசு கல்லூரி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

தர்மபுரி, ஜூலை 24: தர்மபுரி அரசு கலைக்கல்லூரி சார்பில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ், தர்மபுரி அரசு கலைக்கல்லூரி சார்பில், மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை கல்லூரி கல்வி இணை இயக்குனர் சகுந்தலா தொடங்கி வைத்தார். முதல்வர் பாக்கியம் முன்னிலை வகித்தார். கல்லூரியில் இருந்து புறப்பட்ட பேரணி கலெக்டர் அலுவலகம் சென்று மீண்டும் கல்லூரியை அடைந்தது. இதில் மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியபடியும், விழிப்புணர்வு பேனர்களை ஏந்தியும் மாணவ, மாணவிகள் ஊர்வலமாக சென்றனர். இதில் பேராசிரியர்கள் முருகன், சிவபிரகாசம், திருமுருகன் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பாலமுருகன் உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: