அரியலூரில் இன்று காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

அரியலூர், ஜூலை 24: அரியலூர்மாவட்டத்தில் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று( 24ம்தேதி) நடைபெறுகிறது.அரியலூர் மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பாக காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் உடையார்பாளையம் தாசில்தார் அலுவலகத்தில், மாவட்டவருவாய்அலுவலர் தலைமையில் இன்று (24ம்தேதி) பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயுமுகவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எரிவாயுநுகர்வோர்கள், சமையல்எரிவாயுதொடர்பானகுறைகள் இருப்பின் இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து பயனடையலாம் என கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார்.

Related Stories: