மாவட்ட விளையாட்டு அலுவலர் பொறுப்பேற்பு

பெரம்பலூர், ஜூலை 24: பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலராகவும், மாவட்ட விளையாட்டு விடுதி மேலாளராகவும் ராமசுப்ரமணியராஜா 2015ம் ஆண்டு ஜூலை முதல் 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் தமிழக அளவில் 3ஆண்டுகளுக்குமேல் ஒரே இடத்தில் பணிபுரியும் 40க்கும் மேற்பட்ட மாவட்ட விளையாட்டு அலுவலர்கள், விளையாட்டு விடுதி மேலாளர்கள் ஆகியோருக்கு பணிமாறுதல் வழங்கப்பட்டது.

இதன்படி பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரான ராமசுப்ரமணியராஜா, தஞ்சை மாவட்ட விளையாட்டு அலுவலராகவும், தஞ்சை மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு, பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலராகவும் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதைதொடர்ந்து தஞ்சை மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு, கலெக்டர் சாந்தாவை சந்தித்து வாழ்த்து பெற்று நேற்று பொறுப்பேற்றார். இதேபோல் வேலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அலுவலராகப் பணிபுரிந்துவந்த ஜெயக்குமாரி, பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதி மேலாளராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்று பொறுப்பேற்றார்.

Related Stories: