கவரப்பாளையம் மாரியம்மன் கோயிலில் தேர் திருவிழா

ஜெயங்கொண்டம், ஜூலை 23: ஆண்டிமடம் அடுத்த கவரப்பாளையம் மகாமாரியம்மன் கோயிலில் தேர் திருவிழா 15ம் தேதி துவங்கியது. இதைதொடர்ந்து தினம்தோறும் அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் கோயில் தேரோட்டம் நடந்தது. தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.குருபூஜை விழா: மீன்சுருட்டி சொக்கலிங்கேஸ்வரர் கோயிலை கட்டிய மகாகுரு பஞ்சாட்சர சாமிகள் 300 வருடங்களுக்கு முன்னர் இதே நாளில் ஆடி மாதம் பூராட்டாதி நட்சத்திர நாளில் மீன்சுருட்டி கிராமத்தில் ஜீவசமாதி அடைந்தார். இதைதொடர்ந்து நேற்றுமுன்தினம் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.

Related Stories: