வேப்பந்தட்டையை வறட்சி தாலுகாவாக அறிவிக்ககோரி ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், ஜூலை 23: வேப்பந்தட்டையை வறட்சி தாலுகாவாக அறிவிக்ககோரி ஒன்றிய அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.வேப்பந்தட்டை ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் தடையற்ற குடிநீர் வசதி செய்து தர வேண்டும். வேப்பந்தட்டையை வறட்சி தாலுகாவாக அறிவிக் வேண்டும். வேப்பந்தட்டை தாலுகாவில் அனைத்து கிராமங்களிலும் ஓய்வூதியம் நிறுத்தப்பட்ட ஓய்வூதியர்கள் அனைவருக்கும் நிபந்தனையின்றி வழங்க வேண்டும். வெங்கலம், வடகரை அரசு தரிசு நிலங்களில் உழுது பயிரிட்டு வரும் விவசாயிகளுக்கும் பட்டா வழங்க வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஞானசேகரன், முன்னாள் மாவட்ட செயலாளர் வேணுகோபால், மாவட்ட துணை செயலாளர் தியாகராஜன் உள்ளி–்ட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: