150 பேர் பங்கேற்பு மோட்டார் சைக்கிள் மோதி காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி சாவு வாலிபர் கைது

ஜெயங்கொண்டம், ஜூலை 23: ஜெயங்கொண்டம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி காயமடைந்த முதியவர், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுதொடர்பாக வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (65). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் ஜெயங்கொண்டம் - திருச்சி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மருதூர் தெற்குப்பட்டி செல்வம் மகன் மூர்த்தி (19) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், மகாலிங்கம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மகாலிங்கத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு சிகிச்சை பலனின்றி மகாலிங்கம் நேற்று இறந்தார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசில் மகாலி–்ங்கம் மகன் புகார் செய்தார். அந்த புகாரின்பேரில் சப் இன்ஸ்பெக்டர் வசந்த் வழக்குப்பதிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டி விபத்து ஏற்படுத்திய மூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: