ஜெயங்கொண்டத்தில் மாவட்ட அளவிலான போட்டி

ஜெயங்கொண்டம், ஜூலை 23: மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பதற்காக ஜெயங்கொண்டத்தில் மாவட்ட அளவிலான வூசு போட்டி நடந்தது. போட்டியை அரியலூர் மாவட்ட வூசு சங்க தலைவர் பொன்னுசாமி துவக்கி வைத்தார். இதில் சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் பிரிவில் வயது மற்றும் எடை பிரிவில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டது. 8 வயது முதல் 35 வயது உடையவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என 150 பேர் பங்கேற்றனர்.ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழை மாநில துணை செயலாளர் தங்க பாண்டியன் வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட செயலாளர் மோகன் வாழ்த்தி பேசி நன்றி கூறினார்.

Related Stories: