இலவச லேப்டாப் கேட்டு துங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் மறியல்

பெரம்பலூர், ஜூலை 23: தமிழக அரசின் லேப்டாப் கேட்டு துங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவ, மாணவியர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து தலைமை ஆசிரியர் சம்பவ இடத்துக்கு வந்து முன்னாள் மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். தமிழகத்தில் கடந் தமாதம் ஈரோட்டில் இலவச லேப்டாப் கேட்டு மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவியரை போலீசார் தடியடி நடத்தி கலைத்த சம்பவத்தை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் முதல்முறையாக பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் ஜூன் 26ம் தேதி பள்ளியை முற்றுகையிட்டு 2017-2018, 2018-2019ம் கல்வியாண்டுக்கு 678 பேர்களுக்கு இலவச லேப்டாப்களை வழங்ககோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதையடுத்து குரும்பலூர், கை.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிகள், பெரம்பலூர் ரோவர் மேல்நிலைப்பள்ளி, களரம்பட்டி ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, பாடாலூர், எசனை, வெங்கலம், அரும்பாவூர், பூலாம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அடுத்தடுத்து மறியல் போராட்டங்களை நடத்தினர். அதிலும் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் 3 வாரங்களில் 3 முறை சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் கை.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் கை.களத்தூரில் மறியல் போராட்டம் நடத்திய நிலையில் சிலநாள் கழித்து பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டமும் நடத்தி சென்றனர். மேலும் எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் பள்ளியை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இருந்தும் பள்ளி கல்வித்துறை லேப்டாப் கிடைக்குமா, கிடைக்காதா என்பதை மாணவர்களுக்கு இன்னமும் தெளிவுப்படுத்தாமல் உள்ளது.

இந்நிலையில் நேற்று குன்னம் தாலுகா துங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடப்பாண்டு பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவியருக்கு லேப்டாப் வழங்கப்பட்டதை அறிந்த கடந்தாண்டு பிளஸ் 2 படித்த மாணவ, மாணவியர் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பள்ளியை முற்றுகையிட்டனர். பிறகு பள்ளியின் முன்புள்ள அரியலூர்- திட்டக்குடி மெயின்ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.காலை 10 மணிக்கு துவங்கிய மறியல் போராட்டம் காலை 11.30 மணி வரை தொடர்ந்தது. இதையறிந்து துங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமயந்தி, குன்னம் சப் இன்ஸ்பெக்டர் கோகிலா ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது விரைந்து லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இதையேற்று சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு காலை 10 மணிக்கு துவங்கிய மறியல் போராட்டம் காலை 11.30 மணி வரை தொடர்ந்தது. இதையறிந்து துங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமயந்தி, குன்னம் சப் இன்ஸ்பெக்டர் கோகிலா ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Related Stories: