விவசாயிகள் வலியுறுத்தல் கால்நடை மருத்துவமனைகள் திறப்பு

மன்னார்குடி, ஜூலை 24: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டை மற்றும் கோட் டூர் அருகே விக்கிரபாண்டியம் ஆகிய இடங்களில் தலா ரூ 23 லட்சம் மதிப் பில் கட்டப்பட்ட இரண்டு கால்நடை மருத்துவமனைகளை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் தன பாலன் தலைமை வகித்தார். விழாவில் அமைச்சர் காமராஜ் பங்கேற்று புதிய கட்டிடங்களை திறந்து வைத்து பேசினார். மேலும் உள்ளிக்கோட்டை கிராமத்தில் ரூ 22 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட மின்கட்டணம் செலுத்துவதற்கான பிரிவு அலு வலக கட்டிடம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு திருவாரூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார். விழாவில் அமைச்சர் காமராஜ் பங்கேற்று புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார்.

Related Stories: