வேதாரண்யம் அருகே ஹைட்ரோ கார்பன் திட்ட கூட்டு இயக்கத்தினர் பிரசாரம்

வேதாரண்யம், ஜூலை24: வேதாரண்யம் தாலுகா கரியாப்பட்டினம் தலைஞாயிறு பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக விளக்க பிரசாரம் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கத்தினர் நடத்தினர். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக காவிரிபடுகை பாதுகாப்பு இயக்கத்தினர் பிராசாரத்தை மேற்கொண்டனர்.தலைஞாயிறு கடைத்தெருவில் தொடங்கிய இந்த பிரசாரத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பேரூராட்சி செயலாளர் சோமு இளங்கோ துவங்கி வைத்தார். இதேபோல் வேதாரண்யம் தாலுகா தாணிக்கோட்டகத்தில் பிரசார இயக்கத்தினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் கோவை சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.பிராசார இயக்கத்தில் நாகை தெற்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பழனியப்பன், மார்க்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமலிங்கம், விவசாய சங்க வெற்றியழகன் ஆகியோர் கலந்து கொண்டனர். தாணிக்கோட்டகம், வாய்மேடு, கரியாப்பட்டினம், மருதூர், ஆய்காரன்புலம், செட்டிப்புலம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தனர்.

Related Stories: