காரைக்கால் என்ஐடியில் அறிவுசார் சொத்துரிமை விழிப்புணர்வு கருத்தரங்கம்

காரைக்கால், ஜூலை 24: காரைக்கால் மாவட்ட என்ஐடி ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை அலுவலகம் சார்பில், அறிவுசார் சொத்துரிமை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.இக்கருத்தரங்கை என்ஐடி இயக்குனர் சங்கரநாராயணசாமி தொடங்கி வைத்து அறிவுசார் சொத்துரிமை குறித்து விழிப்புணர்வு அடைய வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார். அறிவுசார் சொத்துரிமை நிபுணர்களான அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியர் முனைவர் சண்முகம், என்ஐடி திருச்சி இணைப் பேராசிரியர் முனைவர் முத்துக்குமார் மற்றும் பலர் இக்கருத்தரங்கில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

Related Stories: