பொதுமக்கள் குற்றச்சாட்டு நாங்கூரான் வாய்க்கால் பாலம் இடிந்து விழும் அபாயம் பொதுமக்கள் அச்சம் கொள்ளிடம் அருகே வாலிபரை பாட்டிலால் தாக்கியவர் கைது

கொள்ளிடம், ஜூலை 24:கொள்ளிடம் அருகே வாலிபரை பாட்டிலால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே கூத்தியம்பேட்டை ஊராட்சி, கொப்பியம் கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி மகன் கலையரசன் (20), இவர் அதே பகுதியில் உள்ள அரசு மதுபானகடைக்கு அருகே கடை நடத்தி வரும் பெரியகொப்பியம் கிராமத்தை சேர்ந்த இளவரசன் (32) கடையில் ஆம்பலேட் கேட்டதாக கூறப்படுகிறது. அப்பொழுது அந்த கடைக்காரர் விலை அதிகமாக கூறியுள்ளார்.இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இளவரசன் அவரது உறவினர்கள் பாபு, முத்து, மகேந்திரவர்மன் ஆகியோர் கலையரசனை மது பாட்டிலால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த கலையரசன் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குபதிவு செய்து பாட்டிலால் குத்திய இளவரசனை கைது செய்தனர். மேலும் மூன்று பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: