ரயில்வே கேட் அருகில் டாஸ்மாக் கடை அமைக்க அனுமதி வழங்கக்கூடாது

பாபநாசம், ஜூலை 24: அமைச்சர் துரைக்கண்ணுவிடம் பாபநாசம் வணிகர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர். அதில் பாபநாசம் புதிய பேருந்து நிலையம் அருகில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. தற்போது மாவட்ட நிர்வாகம் மீண்டும் திறக்க முயற்சிப்பதாக அறிகிறோம். இந்த கடை மீண்டும் செயல்பட்டால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுவர். தற்போது ரயில்வே கேட் அருகில் 100 அடி தூரத்தில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.  டாஸ்மாக் கடை செயல்பட்டப்போது வணிகர்களால் நிம்மதியாக வணிகம் செய்ய முடியாத சூழல் நிலவியது. எனவே மீண்டும் டாஸ்மாக் கடையை திறக்க அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: