கும்பகோணம் அருகே பட்டாசு வெடித்தபோது தீவிபத்து கூரை வீடு எரிந்து சாம்பல்

கும்பகோணம், ஜூலை 24: கும்பகோணம் அருகே பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட தீவிபத்தில் கூரை வீடு எரிந்து சாம்பலானது.கும்பகோணம் அடுத்த கொரநாட்டுக்கருப்பூர் திருமஞ்சன வீதியை சேர்ந்த இப்ராஹீம் ராவுத்தர் மகன் முகம்மது உசேன் (30). நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டின் வழியாக இறுதி ஊர்வலம் சென்றது. அப்போது ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் பட்டாசு வெடித்தனர். இதில் முகம்மது உசேன் வீட்டின் மாடியிலுள்ள வீ்ட்டில் போடப்பட்டிருந்த கூரைகள் மீது தீப்பொறி பறந்து விழுந்தது. இதில் தீபரவி கூரை வீடு முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தில் முகம்மது உசேன் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: