சிறப்பு முகாமில் தகவல் மனநிலை பாதித்த பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவர் கைது

கும்பகோணம், ஜூலை 24: கும்பகோணம் அருகே மனநிலை பாதித்த பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவர் கைது செய்யப்பட்டார்.கும்பகோணம் அடுத்த பந்தநல்லூர் வேட்டமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்த இளங்கோவன் மகள் பிரியா (26). இவர் மனநிலை சரியில்லாமல் இருந்தவர். ஆடுகளை மேய்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 22ம் தேதி இவருக்கு 5 மாதத்தில் ஆண் குழந்தை இறந்து பிறந்தது. இதையறிந்த பிரியாவின் பெற்றோர்கள், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.பின்னர் பந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார், பிரியாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது மனநிலை சரியில்லாததால் ஆடு மேய்த்து வந்தேன். சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஜெயராமன் (65) என்பவர், என்னிடம் அன்பாக பேசி பாலியல் பலாத்காரம் செய்ததால் நான் கர்ப்பமானேன். வீட்டில் சொல்லாமல் இருந்த நிலையில் எனக்கு குறை மாதத்தில் பிரசவமானது என்றார். இதைதொடர்ந்து பந்தநல்லூர் போலீசார், ஜெயராமனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: