கரூர் ராயனூரில் அவலம் துணை சுகாதார நிலையத்தில் கண்ணாடி உடைந்து சேதம்

கரூர், ஜூலை 24: கரூர் நகராட்சிக்குட்பட்ட ராயனூரில் முகப்பு கண்ணாடி உடைந்த நிலையில் உள்ள துணை சுகாதார நிலையத்தை பார்வையிட்டு சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் நகராட்சிக்குட்பட்ட ராயனூர் பகுதியில் இருந்து ஒத்தையூர் செல்லும் சாலையோரம் துணை சுகாதார நிலையம் உள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சுகாதார நிலையத்தின் முகப்பு கண்ணாடி உடைந்தது. அதற்கு பிறகு புதிதாக கண்ணாடி மாற்றப்படாமலேயே உள்ளது.

சுகாதார நிலையத்தின் உட்புறம் பல்வேறு மருந்துகள் உள்ளன. அவை அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டிய விஷயம் என்பதால் உடைந்த ஜன்னல் கண்ணாடியை மாற்றி புதிதாக அமைத்து தர வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டது.ஆனால் ஒரு ஆண்டுக்கும் மேலும் இதே நிலையில்தான் சுகாதார நிலையத்தின் முகப்பு பகுதி உள்ளது. எனவே மருந்துகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு கருதி முகப்பு கண்ணாடிகளை மாற்ற தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: