தாந்தோணிமலை நகர பகுதியில் சாக்கடை வடிகால் வசதி இல்லாததால் கடும் அவதி

கரூர், ஜூலை 24: கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலையில் உள்ள சில நகர்ப்பகுதிகளில் சாக்கடை வடிகால் வசதி ஏற்படுத்திட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை பகுதியில் அசோக்நகர் உட்பட நகரைச் சுற்றிலும் ஏராளமான நகர்ப்பகுதிகள் உள்ளன. ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலான பகுதிகளில் சாக்கடை வடிகால் வசதி இல்லாமல் உள்ளது.ஒரு சில பகுதிகளில் தற்போதுதான் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இந்த பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே இந்த பகுதிகளில் தேவையான இடங்களை பார்வையிட்டு சாக்கடை வடிகால் வசதி கொண்டு வர விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: