நெரூர் அரசு மேல்நிலை பள்ளி அருகில் குறுகிய சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

கரூர், ஜூலை 24: கரூர் மாவட்டம் நெரூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகேயுள்ள குறுகிய சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் பகுதியில் இருந்து நெரூர், திருமுக்கூடலூர், ரெங்கநாதன்பேட்டை, சதாசிவ பிரம்மேந்திராள் ஆலயம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் நெரூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகேயுள்ள குறுகிய வாய்க்கால் பாலத்தின் வழியாக சென்று வருகிறது.பாலம் எந்தவித பாதுகாப்பும் இன்றி மிகவும் குறுகிய நிலையில் உள்ளதால் அவ்வப்போது வாகன விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த குறுகிய வாய்க்கால் பாலத்தை விரிவுப்படுத்திட தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.பேருந்துகள் மட்டுமின்றி சுற்றுலா ஸ்தலமான சதாசிவ பிரம்மேந்திராள் ஆலயத்துக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வாகனங்களில் வந்து செல்கின்றனர்.எனவே அனைத்து தரப்பினர்களின் நலன் கருதி குறுகிய வாய்க்கால் பாலத்தினை விரிவுபடுத்தி, வாகனங்கள் எளிதாக செல்ல தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களாலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: