அரசு காலனி முதல் சோமூர் பிரிவு வரை ஆபத்தான வளைவுகளால் விபத்துகள் ஏற்படும் அபாயம்

கரூர், ஜூலை 24: கரூர் மாவட்டம் அரசு காலனி பகுதியில் இருந்து சோமூர் பிரிவு வரை சாலைகளில் உள்ள ஆபத்தான வளைவு பாதையில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் மாவட்டம் அரசு காலனி பகுதியில் இருந்து சோமூர் பிரிவு சாலை வரை காளிபாளையம், மின்னாம்பள்ளி பிரிவு, பூந்தோட்டம் ஆகிய பகுதிகளில் ஆபத்தான வளைவு பாதை உள்ளது. இந்த பகுதியில் வரும் அனைத்து வாகனங்களும் மிகுந்த வேகத்துடன் வருவதால் மற்ற வாகனங்கள் பீதியுடன்தான் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.மேலும் இரவு நேரங்களில் இந்த பகுதியில் போதிய வெளிச்சம் குறைவு காரணமாக அவ்வப்போது வாகன விபத்துக்களும் நடைபெற்று வருகிறது. எனவே இந்த ஆபத்தான வளைவு பாதையில் வாகன விபத்துக்களை தடுக்கும் வகையில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கிராமப்புற சாலைகள் என்பதால் இந்த ஆபத்தான வளைவு பாதையில் குறைந்தபட்சம் வேகத்தடையாவது கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. கிராமங்கள் சூழ்ந்த பகுதி என்பதால் அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெறுவதை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

Related Stories: