மின்னாம்பள்ளி- வாங்கல் இடையே குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

கரூர், ஜூலை 24: சாலை சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கரூர் மின்னாம்பள்ளியில் இருந்து வாங்கல் செல்லும் சாலை சீரமைக்கப்படவில்லை. சாலையில் பராமரிப்பு வேலைகளும் மேற்கொள்ளப்படவில்லை.இதனால் ஆங்காங்கே சாலை பழுதடைந்து காணப்படுகிறது. சாலையின் திருப்பத்தில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து தார் கலவை இன்றி காணப்படுகிறது.இதனால் வாகனங்களின் டயர்களை பதம் பார்க்கிறது. அடிக்கடி வாகனங்கள் பஞ்சர் ஆகிறது. இரவு நேரங்களில் புதிதாக வாகனங்களில் வருவோர் தடுமாறி விழுந்து செல்கின்றனர். சாலைப்பணிகளை மேற்கொள்ளும்போது இது போன்ற போக்குவரத்து மிகுந்த சாலைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: