உரிமம் இல்லாமல் விஷத்தன்மை கொண்ட பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எஸ்பி பாண்டியராஜன் எச்சரிக்கை

கரூர், ஜூலை 24: கரூர் மாவட்ட எஸ்பி பாண்டியராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,கரூர் மாவட்டத்தில் உரிய உரிமம் இல்லாமல் பெட்டிக்கடைகள் மற்றும் மளிகை கடைகளில் விஷத்தன்மைகொண்ட, மனித உயிர்களைப் போக்கக்கூடிய எலிமருந்து, சாணிபவுடர், பூச்சிமருந்து, சல்பாஸ் மாத்திரை போன்ற பொருட்களை (மாத்திரை வடிவிலோ, திரவ வடிவிலோ) வைத்து விற்பனை செய்தால் சட்டப்படியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உரிய உரிமம் இன்றி விஷத்தன்மை கொண்ட பொருட்களை யாரும் விற்பனை செய்தால் உடன் கரூர் மாவட்ட எஸ்பிக்கு தகவல் தெரிவிக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: